Thursday, November 19, 2009

கவிதைகள்...

முத்தம்
காதலர்களுக்கு கிடைத்த
ஒரு காதல் சின்னம்

வங்கியில் போடா முடியாத
Fixed Deposit

முரண்பாடு
கடவுளை கணுவதாகக் கூறி
தனது தாய் தந்தையரை
முதியோர் இல்லத்தில் விட்டு
விட்டுச் சென்றான்.

அதிஷ்டம்
வாழ்க்கையில் நம்ப
முடியாமல் நடக்கும்
சில சம்பவங்களுக்கு
மனிதர்கள் மூலம்
கூறப்படும் வார்த்தை

ஒற்றுமை
உரிக்க உரிக்க ஒன்றுமில்லாமல்
போவது வெங்காயமும், காதலும்
கடைசியில் அழுவான்
உரித்தவனும்! காதலித்தவனும்!

பூ
ஒரு சிறிய மொட்டாக இருந்து
பிறகு மனம் வீசும் மலராக விரிந்து
எப்படி என் மனத்தை கவர்ந்தாய்.

Sunday, November 8, 2009

ராஜத்தின் மனம்

மாலை 6 மணி அளவில் கலா தனது அலுவலகம் முடிந்து வீடு வந்து கொண்டிருந்தாள். அன்றைய தினம் நடந்தது அவளது நினைவில் அசை போட்டுகொண்டிருந்தது ஆமாம் அவளை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்து இருந்தார்கள். மாலை 6 மணிக்கு வருவதை அவளது அம்மா அவளிடம் 5 மணி அளவில் தான் தெரிவித்தாள். வேணு பூ வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தான். வேணு கலாவின் தம்பி B.Com இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தான்.

கலாவிற்கு ஒரு தங்கையும் உண்டு அவள் B.Sc முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறாள். அப்பா சுந்தரம் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுகிறார். அம்மா மீனாட்சி அந்தக்கால puc படித்தவள் இருந்தாலும் வீட்டுவேலைகளை பார்க்கவே நேரம் இல்லாததால் வேலைக்கு எங்கும் செல்லவில்லை. கலா MA வரை படித்துவிட்டு ஒரு தனியார் அலுவலகத்தில் ஸ்டெனோவாக வேலை பார்த்து வந்தாள். தினமும் அவள் வேலை முடித்து வருவதற்கு நேரம் ஆகிவிடும். அன்றும் அப்படிதான் அலுவலகம் விட்டு வருவதற்கு நேரம் ஆகி விட்டது.

மாப்பிள்ளை வீட்டார் ஏற்கனவே பெண்ணை புகைப்படம் முலம் பார்த்து பிடித்து விட்டதால் பெண்ணை நேரில் பார்க்க காத்திருந்தனர். அவள் விட்டிற்கு வந்ததும் கலா சீக்கிரம் புடவை மாற்றிக்கொண்டு வா. அவர்கள் வந்து ஒரு மணி நேரமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றாள் அம்மா மீனாட்சி.

கலாவினது உறவினர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். கலா புடவை மாற்றிக்கொண்டு வந்து அனைவருக்கும் காப்பி கொடுத்தாள். போட்டோவிள் பார்த்ததை விட நேரில் மிகவும் ஆழகாக இருந்தாள் கலா. வாசன் தனது அம்மாவிடம் ஏதோ முணுமுணுத்தான். என்ன வென்று விசாரித்த போது பெண்ணிடம் தனியாக பேசவேண்டும் என்பதை தெரிவித்தனர். இதை கலாவிடம் தெரிவித்தவுடன் கலா மெளனமாக இருந்தாள். இருந்தாலும் மாப்பிள்ளை வீட்டார் கேட்டுவிட்டனர் என்பதற்காக அவளை பேச அனுமதித்தனர்.

வாசன் கலாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பிறகு அனைவரும் சென்று விட்டனர். மற்றவிசயங்களை பெரியவர்கள் அனைவரும் கூடி பேசி முடித்தனர். ஒரு வாரம் கழித்து திடீரென்று ஒரு பூகம்பம் வெடித்தது.

ராஜம் வாசனது அம்மா கொஞ்சம் மிடுக்கானவள். வரதட்சணை பணம் கொஞ்சம் அதிகமாக எதிர் பார்த்தாள். ஏற்கனவே இவர்கள் கேட்ட வரதட்சணையை செய்வதற்கு பெண்வீட்டார் ஒத்துகொண்டனர். அதை செய்வதற்கே அவர்களால் முடியாத சூழ்நிலை. இருப்பினும் திடீர் என்று வாசன் தாயார் மேற்க்கொண்டு 5 சவரன் நகை கேட்க அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனை மாப்பிள்ளை வீட்டாரிடம் எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. ராஜத்திற்கு முதலிருந்தே இந்த சம்மந்தத்தில் துளி கூட நாட்டம் இல்லை அதனால் தானோ என்னவோ பெண்வீடாரினால் அவ்வளவு நகை போட முடியாது என்று தெரிந்து கொண்டே அவ்வாறாக அவர்களிடம் வரதட்சணை அதிகமாக கேட்டாள்.

வாசனும் அவனது தந்தை லோகநாதனும் எவ்வளவோ எடுத்து கூறிப் பார்த்தனர். அதற்கெல்லாம் மசிந்தவளாக தெரியவில்லை ராஜம். ஆனால் ராஜம் இவ்வாறாக நடந்துகொள்வதற்கு ஒரு முலகாரணமும் உண்டு என்பது அவளுக்கும் விஜயனுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு விஷயமாகும். வாசன் வீட்டாருடைய குடும்ப Doctor தான் விஜயன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வாசனுக்கு தீராத வியாதி மூளையில் கட்டி (Brain Tumor) என்று அழைக்கப்படும் கொடுமையான வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறான் வாசன் என்பது தான் அந்த உண்மை. ஒரு சிறு விபத்தில் வாசனுக்கு தலையில் அடி பட்டு காயம் ஏற்ப்பட்ட போது தான் இந்த வியாதியால் அவன் பாதிப்படைந்தது பற்றி தெரியவந்தது.

இதனை குணமாக்குவதற்கு வாசனது தாயாரும் எவ்வளவோ முயற்சி எடுத்துப்பர்த்தும் பயன் இல்லை. அவளும் வேண்டாத தெய்வம் இல்லை. இந்த நிகழ்வு வாசனது தந்தைக்கு கூட தெரியாது. ஆனால் இந்த நிகழ்வு தெரியாமலேயே வாசனும் அவனது தந்தை லோகநாதனும் ராஜத்திடம் மிகவும் கடிந்துக்கொண்டனர்.

ஒரு மாதத்திற்கு பின்னால் லோகநாதனுடைய அக்கா பெண்ணான சாந்தியை மணம்முடித்து வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ராஜத்திடம் கூறாமலேயே லோகநாதனும் வாசனும் இரண்டு தெரு தள்ளி உள்ள அக்கா வீட்டிற்க்கு செல்வதாக பேசிக்கொண்டனர். சமையல் அறையில் ஒரு ஓரமாக நின்று இதை கேட்டுக்கொண்டிருந்த ராஜம் இந்த சம்மந்தத்தை எப்படியாவது தட்டிக்கழிக்க வேண்டும் என்று தனது மனதிற்குள் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள். இது தெரியாமல் லோகநாதனும் வாசனும் மிகவும் ஆனந்தத்தில் இருந்தனர். ஆனால் இது ராஜதிற்கு மட்டும் தெரிந்த உண்மையாக இருந்தது.